செங்கல்பட்டு அருகே சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் எடுத்த பழைய சீவரம் பகுதியை சேர்ந்தவர் இன்பரசன் (29). இவர் சென்னை புழல் சிறையில் சிறைக் காவலரைக் பணியாற்றி வருகிறார்.
இன்று காலை அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பின் பேரில் பழைய சீவரம் கோயில் அருகே சென்ற போது அவரை வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவ்வழியாக சென்றபோது காவல்துறைக்கு தகவல் தெரிவித்து பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் என்பவரது மகன் என்பவருக்கும் இன்பரசன் என்றும் ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.