மாறி மாறி ஸ்ரீபெரும்புதூரை வசம் செய்யும் கட்சிகள்.. இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு?
Recommended Video
சென்னை: தமிழகத்தின் மிகப் பெரிய தொகுதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. இந்த தொகுதி 2009-ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இதன் கீழ் கொண்டு வரப்பட்டன.
இந்த தொகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு எம்பியாக அதிமுகவை சேர்ந்த கே என் ராமசந்திரன் தேர்வு செய்யப்பட்டார். முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட இவருக்கு 63 வயதாகிறது. இவர் முதுகலை படிப்பு படித்துள்ளார்.
இவர் இதுவரை 26 முறை நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்றுள்ளார். தனிநபர் மசோதாக்கள் எதையும் அவர் தாக்கல் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் 442 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பெண் வாக்காளர்கள்
இவரது வருகை பதிவு சதவீதமும் அந்தளவுக்கு மோசம் இல்லை. 73 சதவீதம் வருகை பதிவை பெற்றுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19,46,503. இவற்றில் 982,862 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். பெண் வாக்காளர்கள் 963,641 ஆவர்.
வித்தியாசம்
வாக்குப் பதிவு சதவீதம் 66 ஆகும். இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற வாக்குகள் 545, 820 ஆகும். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திமுகவின் ஜெகத்ரட்சகன். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 1,02,646 ஆகும்.
அதிமுக
இந்த தொகுதியின் வெற்றி வாய்ப்புகளை பார்த்தோமேயானால் கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரை திமுகவினரே வெற்றி பெற்றனர். பின்னர் 1977-ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்றது. பிறகு திமுக, காங்கிரஸ், அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்றனர்.
தேஜகூ
கடந்த 1999-ஆம் ஆண்டு 2014-ஆம் ஆண்டு திமுகவின் ஏ கிருஷ்ணசாமி இரு முறையும் டி ஆர் பாலு ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். 1998-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற அதிமுகவும் 1999-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற திமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கூட்டணி அமைத்திருந்தன.
வெற்றி முடிவுகள்
மிகப் பெரிய தொகுதியான இதன் வெற்றி வாய்ப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் மாறி மாறி திமுக கூட்டணி, அதிமுக வெற்றி பெற்றதால் இந்த முறை வெற்றி முடிவுகள் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.