பரிதாபம்.. தேர்ச்சி அடைந்தது அறியாமல் தோல்வி பயத்தில் தற்கொலை செய்த எஸ்எஸ்எல்சி மாணவி
மதுராந்தகம்: எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் சந்தியா. இவர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியிருந்தார். இன்று காலை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார்.
எஸ்எஸ்எல்சி ரிசல்ட்.. அரசு பள்ளிகள் அசத்தல்.. ஆண்கள் பள்ளிகளைவிட கோ-எட் பள்ளிகளில் அபார தேர்ச்சி
இந்த நிலையில் அவர் தேர்ச்சி அடைந்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மாணவியின் இந்த முடிவால் அப்பகுதியில் சோகம் நிலவியுள்ளது.