இது எங்க ஏரியா.. உள்ளே வராதே.. நாங்களும் சொல்வோம்ல.. குரங்குகளுக்கு ஏரியா பிரச்சினை உண்டு போல!
காஞ்சிபுரம்: " இது எங்க ஏரியா.. உள்ளே வராதே " .. இந்த வார்த்தை மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளான எங்களுக்கும் சொல்ல உரிமை உண்டு..
காஞ்சிபுரம் புகழ்பெற்ற முருகன் கோயில் வளாகத்தில் இன்று நடைபெற்ற இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் தற்போதைய நிலையில் ஜாதி , இனம் , மொழி என பலவகைகளில் வேறுபட்டு நாள்தோறும் பற்பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
இளைஞர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் விளையாட்டு , நிகழ்ச்சிகள் என எவ்விதத்திலும் தாங்கள் தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என சொல்லும் வகையில் திரைப்பட வசனம் போல் " இது எங்க ஏரியா .. உள்ளே வராதே " என்ற நிலைபாடு சட்டமில்லாது செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் இரு தரப்பாக சுமார் 30 நிமிட நேரம் சண்டையிட்டு கொண்டது. அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
கோயில் ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் குரங்குகளை விரட்டபல முயற்சிகள் எடுத்தும் பயனில்லை. எங்களுக்கும் இடம் , எல்லை பிரச்சினைகள் உள்ளது என்பது போல் செயல்பட்டது. இச்சண்டையில் பல குரங்குகளுக்கு ரத்தம் மற்றும் காயங்களுடன் ஊர்ந்து பிரிந்து சென்றது.
சூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் தருவதாக நான் அறிவிக்கவில்லை.. அர்ஜுன் சம்பத் விளக்கம்