ஆரஞ்ச், ஊதா நிறத்தில் பட்டாடை அணிந்த அத்திவரதரை குடும்பம் சகிதமாக தரிசித்த "கள்ளழகர்"
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
உலக பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலாகும். அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தருளிய அத்திவரதர் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனந்தசயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.
அருளை வாரி வழங்கும் அத்திவரதர் என்பதாலும் இப்போது விட்டால் இத்தோடு 40 ஆண்டுகள் கழித்துதான் பார்க்க முடியும் என்பதாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குடும்பத்துடன் காஞ்சிபுரம் வருகிறார் குடியரசுத் தலைவர்... அத்தி வரதரை தரிசனம் செய்கிறார்
பக்தர்கள்
கடந்த 10 நாட்களில் 10 லட்சம் பேர் வரை அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வாசலில் படுக்கை
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரதனின் அருளுக்காக காத்துக் கிடக்கின்றனர். இன்னும் சொல்ல போனால் வெளியூர் மக்கள் இரவே வந்து கோயில் வாசலில் படுத்து உறங்குகின்றனர்.
அத்திவரதர்
பின்னர் காலை 5 மணிக்கு தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்புகின்றனர். அத்திவரதரை தரிசிக்க கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். அத்திவரதருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
தரிசனம்
இந்த நிலையில் இன்றைய தினம் அத்திவரதர் ஆரஞ்சு நிறத்தில் உடையும் ஊதா நிற பார்டரில் அங்கவஸ்திரமும் அணிந்திருந்தார். அவரை தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன், சுதீஷின் மனைவி ஆகியோர் தரிசனம் செய்தனர்.