திருப்போரூரில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து பெண் படுகொலை.. வழிபறி முயற்சியில் கொலையா?
செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் கடையில் இருந்த பெண் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் திருவஞ்சாவடி தெருவில் வசிப்பவர் சுப்பிரமணி(47).இவரது மனைவி சத்யா (44). இவர்கள் திருப்போருர் சன்னதி தெருவில் பேன்சி கடை வைத்திருந்தார்கள்.
நேற்று காலை வழக்கம் போல் வழக்கம் போல் கடையை திறந்து தம்பதியினர் பணியாற்றி வந்தனர். காலை 10.30 மணி அளவில் சத்யாவை கடையை பார்க்குமாறு கூறிவிட்டு அவரது கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
நடுராத்திரி.. பெரிய கல்லை தூக்கி போட்டு நூதன கொள்ளை.. உயிருக்கும் ஆபத்து.. இந்த வீடியோவை பாருங்க
அவர் வீட்டுக்கு சென்றுவிடடு திரும்பி வந்து பார்த்த போது மனைவி காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து அலறிய அவர், அக்கம் பக்கத்து கடைக்கார்களின் உதவியுடன் மனைவியை திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சத்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்துவந்து விசாரணை நடத்திய திருப்போரூர் போலீசார் கொலை வழக்கு பதிவுசெய்துள்ளனர். கடைக்கு வந்து அவரிடம் நகையை கொள்ளையடிக்கும் அடிக்கும் அடித்துக்கொன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவத்தால் திருப்போரூரில் நேற்று பரபரப்பு நிலவியது.