கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

220 கோடியைக் கொண்டு போய் கொட்டி கட்டிய பாலம்.. ஜல்லி ஜல்லியா பேந்து போச்சே!

Google Oneindia Tamil News

Recommended Video

    220 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலம்-வீடியோ

    மார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் 220 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், தமிழகம், கேரளா இடையே விரைவாக செல்லவும் 220 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது.

    a new bridge in marthandam damaged due to worst construction, peoples charged the government

    அந்த மேம்பாலத்தில் கடந்த 19 ம் தேதி முதல் ஏராளமான வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளன. மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் சரக்கு வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குழி விழுந்துள்ளது. ஏற்கனவே அதிர்வு இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில் குழி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், ஐஐடி பொறியாளர்களின் ஆய்வு அறிக்கையை வெளிப்படையாக அறிவித்து அச்சத்தை போக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பகுதியை விரைவில் சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    A new bridge constructed near Marthandam at the estimate of Rs.220 damaged due to worst construction by the officials, peoples blamed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X