டீட்டெய்ல் கேட்ட ரோஸ்.. அடுத்தடுத்து வந்து விழுந்த ஆபாச படங்கள்.. மர்ம ஆசாமிக்கு குளச்சல் போலீஸ் வலை
ஏடிஎம் நம்பர் தராதால் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி உள்ளார் ஒருவர்
கன்னியாகுமரி: ஞாயிற்றுக்கிழமை மதியானம் தன் செல்போனுக்கு ஆபாச படங்களாக வந்து கொண்டிருப்பதை பார்த்ததும் ரோஸ் அலறிவிட்டார்.. இந்த வேலையை பார்த்தவர் யார் என்று குளச்சல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்!!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் ரோஸ்... இவரது செல்போனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவர் போன் செய்திருந்தார்.. அதில் பேசியவர் தன்னை ஒரு பேங்க் ஆபீசர் என்றும், வங்கியின் எடிஎம் கார்டு நம்பர் வேண்டும், செக் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.
ஆனால் ரோஸ் உஷாராகிவிட்டார்.. காரணம், ஏற்கனவே இப்படித்தான் ஒரு போன் வந்து, செல்போன் பின் நம்பர் கேட்கவும், இவரும் தந்துள்ளார்.. கடைசியில் 8 ஆயிரம் ரூபாயை யாரோ எடுத்து கொண்டு போய்விட்டார்களாம். அதனால் இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்று அந்த அதிகாரியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
"ஆமா, இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.. எந்த ஊர்ல ஞாயிற்றுக்கிழமை பேங்க் திறந்து வெச்சிருக்காங்க? யார் நீங்க?" என்று கேட்கவும், டக்கென அந்த போன் கட் ஆகிவிட்டது.. அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே ரோஸ் போன் நம்பருக்கு ஆபாச வீடியோக்கள் வரிசையாக வர ஆரம்பித்தன.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோஸ், உடனடியாக குளச்சல் ஸ்டேஷனில் புகார் தந்தார்.
போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... குளச்சல் பகுதியில் இப்படிப்பட்ட புகார்கள் நிறைய வருகிறதாம்.. கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்டோர் ஏடிஎம் கார்டு, பின் நம்பர் வேண்டும் என்று கேட்டு போன் செய்கிறார்களாம்.
21 வயசு பொண்ணு.. 17 வயது சிறுவன்.. வாயை பொத்தி.. சென்னையில்தான் இந்த கொடுமை!
வட இந்தியாவில் வந்த செல்போன் அழைப்பின்பேரில் ஏடிஎம் கார்டு எண்களை நம்பி சொல்லிவிட்டு, ஆயிரக்கணக்கான பணங்களை மக்கள் இழந்துள்ளனர். இப்படி அப்பாவிகளை ஏமாற்றி பணம் பறிப்பது யார் என தெரியவில்லை.. பணம் தராவிட்டால், ஆபாச வீடியோக்களை அனுப்பி விடுகிறார்களாம்.. அவர்களை கண்டுபிடிக்க தான் போலீசார் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.