குமரி முழுக்க.. தூள் பறக்கும் எச். ராஜா பேனர்.. காற்றில் பறக்கும் ஹைகோர்ட் கண்டிப்பு!
குமரியில் எச்.ராஜாவுக்கு பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன
Recommended Video
சென்னை: கோர்ட் உத்தரவுக்கும்.. எச்.ராஜாவுக்கும் ரொம்ப தூரம் போல தெரிகிறது.. கன்னியாகுமரி முழுக்க எச்.ராஜா உருவம் பொறித்த பேனர்கள் பறக்கிறது!
பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ மரணம் இன்னும் நம்மை விட்டு மறையவே இல்லை. மேலும், பேனர்கள் வைக்க கூடாது என்று தொண்டர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் சாட்டையை எடுத்து சுழட்டியது ஐகோர்ட்!
இதையடுத்து ஒவ்வொரு கட்சி தலைவர்களும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்சி சார்பில் உத்தரவு போட்டனர். அதேபோல, நடிகர்களும் தங்களுக்கு யாரும் பேனர்களை வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் மட்டும் எச்.ராஜாவின் பேனர்கள் வழிநெடுகிலும் வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்த்தாண்டம் அருகே கோட்டகம் பகுதியில் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் போலும். இந்த நிகழ்ச்சியில்தான் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். இதற்காகத்தான் ரோடெல்லாம் நிறைய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே பிரம்மாண்டமான பேனர்கள்தான்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி, இதற்கெல்லாம் கலெக்டர் அனுமதி தந்தாரா அல்லது இப்படி பேனர் வைத்து கொள்ள, போலீசிடம் அனுமதியாவது வாங்கப்பட்டதா என்றும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஏற்கனவே ஊரெல்லாம் வைக்கப்பட்ட பேனர்களை பல தரப்பினர் அகற்றி வரும் நிலையில், புதிதாக எச்.ராஜாவுக்கு பேனர்களை வைத்துள்ள சம்பவமும், பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு தந்துள்ளது.
ஏற்கனவே கோர்ட்டாவது.. "டேஷ்"ஷாவது.. என்று நீதிமன்றத்தை எச்.ராஜா விமர்சித்திருந்த நிலையில், திரும்பவும் ஒரு நீதிமன்ற அவமதிப்பா என்று மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.