கன்னியாகுமரியில் 31 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களை பெற்ற பாஜக!
கன்னியாகுமரி: உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக 31 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களைப் பெற்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பிடித்தது. தமிழக அளவில் கடந்த 2011 தேர்தலைவிட பாஜக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் அதிக இடங்களில் வென்றுள்ளது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக மட்டும் 31 இடங்களைப் பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தலில் திமுக 5-ல் வென்றது.
அதிமுக 4 கவுன்சிலர்களையும் பாஜக 2 கவுன்சிலர்களையும் பெற்றுள்ளது. இங்கு மொத்தம் 111 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
நாகை - இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்திய பாஜக
இதில் பாஜக மட்டும் 31 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக 16 கவுன்சிலர்களை பெற்றுள்ளது.
திமுக 21 கவுன்சிலர்களையும் காங்கிரஸ் 24 இடங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 கவுன்சிலர்களையும் பெற்றுள்ளன.
குமரியில் முளைத்த முதல் வித்து.. சுயம்புன்னு சொல்வாங்களே.. அது சாட்சாத் சீமான்தான்!