கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பல பெண்களுடன் தொடர்பு.. தாயில்லாத பிள்ளைக்கு தினசரி சூடு.. கொடூரத் தந்தையின் அடாவடி செயல்

Google Oneindia Tamil News

Recommended Video

    தாயில்லாத பிள்ளைக்கு தினசரி சூடு.. தந்தையின் அடாவடி செயல்

    மார்த்தாண்டம்: தாயில்லாத குழந்தையை சூடு வைத்து சித்திரவதை செய்த தந்தை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடந்த சித்திரவதை சம்பவம் குறித்து தந்தையிடம் நாகர்கோவிலில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    father tortures own kid and arrested

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (33). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் ஏற்ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    7 வயது மகள் வாவறை அரசு பள்ளியில் 2 ம் வகுப்பு பயின்று வருகிறார். மனைவி இறந்த பிறகு சமீப காலமாக வேறு பெண்களுடன் மணிகண்டன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மகளுக்கு உடலில் சூடு வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

    father tortures own kid and arrested

    இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவியின் கன்னத்தில் தீக்காயம் இருந்ததை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி க்கு தகவலளித்தனர். சிறுமியிடம் விசாரித்த போது, தனது அப்பா தொடர்ந்து அடித்து துன்புறுத்தி நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்வதாக சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டனர்.

    மணிகண்டனை நாகர்கோவில் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணிகண்டன் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    English summary
    Police have arrested a father for torturing his child and lodged in jail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X