பாடம் நடத்தும்போது மாணவிகளை தொட்டு பேசிய ஆசிரியர்.. அள்ளிக் கொண்டு போனது போலீஸ்!
6-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
கன்னியாகுமரி: கிளாஸில் பாடம் நடத்தும்போது 3 மாணவிகளின் உடம்பில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட வாத்தியாரை மகளிர் போலீசார் அள்ளி கொண்டு போய் ஸ்டேனில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே 6 ம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. குளச்சல் மகளிர் போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கல்பாறை பொற்றை பகுதியில் ஒரு தனியார் நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர்தான் டேவிட்ராஜ். 46 வயசாகிறது. இவர் படந்தால்மூடு பகுதியை சேர்ந்தவர். 6-ம் வகுப்புக்கு பாடம் நடத்துகிறார். இங்கு 3 மாணவிகளிடம் தொடர்ந்து டேவிட்ராஜ், அத்துமீறி நடப்பதாக மாணவிகள் புகார் கூறினர்.
போன வெள்ளிக்கிழமையும் கிளாஸ் ரூமில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அதே குறிப்பிட்ட 3 பேரின் உடம்பில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதனர்.
இது சின்ன தோல்விதான்.. நான் மட்டும் நேத்து ஆடியிருந்தா.. இந்தியா வின் தான்.. ஜெயக்குமார் அடடே!
இதை கேட்டு கொதித்து போன பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியரும் கொல்லங்கோடு போலீசிலும் புகார் தந்தார். அதன்பேரில், போலீசாரும், குழந்தைகள் நல அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளிடம் வாத்தியார் அத்துமீறியது உண்மைதான் என தெரியவந்தது.
பின்னர் டேவிட் ராஜை கொல்லங்கோடு போலீசார் அழைத்து சென்று குளச்சல் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசாரும் வாத்தியார் டேவிட்ராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.