கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினமும் ராத்திரி லேட்டாக வந்த புது மாப்பிள்ளை.. பொங்கிய புது மனைவி.. கடைசியில் ஒரு தற்கொலை!

கன்னியாகுமரியில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு கொண்டு இறந்துவிட்டார்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கல்யாணம் ஆகி 20 நாள்தான் ஆகிறது.. கணவன் ஒரு பக்கம் தூக்கு போட்டு கொண்டார்.. இதை பார்த்து மனைவி மறுபக்கம் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. இத்தனைக்கும் இது ஒரு லவ் மேரேஜ்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியிலுள்ள ஜீவாநகரை சேர்ந்தவர் விஷ்ணு... இவர் ஷார்ட் பிலிம் எடுக்கும் போட்டோகிராபர்.. இவருக்கு ஷாலினி என்பவர் பழக்கமானார்.. அவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.. இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

Husband suicide and wife attempt suicide in 20 days of marriage life in Kanyakumari

ஒருகட்டத்தில் கல்யாணமும் செய்ய முடிவெத்து, தங்கள் வீடுகளில் சொன்னார்கள்.. இருவீட்டிலும் பெற்றோர்கள் சம்மதம் தந்தவுடன் அதன்படியே அனைவரின் ஆசீர்வாதத்துடன் கல்யாணம் நடந்தது.. 20 நாட்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்து முடிந்தது.

அதற்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள்.. என்ன காரணம் என்று தெரியவில்லை. கல்யாணமாகி அடுத்த ஒருசில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது தகராறாகவும் வெடித்துள்ளது.. இதனால் ஆத்திரம் அடைந்த ஷாலினி, கணவன் கண் முன்னாடியே தாலியை கழற்றி வீசிவிட்டதாக தெரிகிறது... இதை பார்த்து அதிர்ந்து போன விஷ்ணுவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது.

அந்த அதிர்ச்சியில் வேகவேகமாக தன்னுடைய ரூமுக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார். பிறகு சந்தேகம் அடைந்த சொந்தக்காரர்கள், கதவை உடைத்து கொண்டு உள்ளே போனபோதுதான், விஷ்ணு தூக்கு போட்டு கொண்டு பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்த ஷாலினி கிச்சனுக்கு ஓடிப்போய் கத்தியை எடுத்து தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கழுத்து அறுபட்டு ரத்தம் கொட்டியதை பார்த்த உறவினர்கள் பதறிபோய், ஷாலினியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

டெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்!டெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்!

ஆனால், விஷ்ணுவுக்கும், ஷாலினிக்கும் எதற்காக சண்டை வந்தது என்று தெரியவில்லை.. விஷ்ணுவின் குடும்பத்தினர், ஷாலினியை விமர்சித்து வந்ததாக தெரிகிறது.. மேலும் விஷ்ணு தினம்தோறும் நைட் நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்துள்ளார்.. இதுதான் சண்டைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.. இருந்தாலும் கோட்டார் போலீசாரின் விசாரணை நடக்கிறது.

English summary
Husband suicide and wife attempt suicide in 20 days of marriage life in Kanyakumari
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X