மகளுக்கும்.. காதலிக்கும்.. ஒரே வயசு.. தனிகுடித்தனம் வேறு.. மினி பஸ் கண்டக்டரின் லீலைகள்.. குமரியில்
கன்னியாகுமரி: மகளுக்கும் காதலிக்கும் ஒரே வயசு.. கல்லூரி மாணவியுடன் குடித்தனம் நடத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி, அப்பெண்ணின் வீட்டின்முன்பு தர்ணாவில் உட்கார்ந்துவிட்டார்.. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்... இவரது மனைவி சுகந்தி.. மினி பஸ் கண்டக்டராக வேலை பார்க்கிறார்.. சுகந்தியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். 19 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
பஸ்ஸில் காலேஜ் பெண்கள் ஏறிவிட்டால் ரஞ்சித்துக்கு குஷியோ குஷி.. அந்த பெண்களிடம் பேசி பேசியே கவிழ்த்து விடுவார்.. அவரது ஜாலியான பேச்சில் பல மாணவிகளை மயக்கி, காதல் வலையிலும் வீழ்த்திவிடுவார்.
அப்படித்தான் ஒரு மாணவியை பேசி பேசியே நம்ப வைத்தார்.. ஒன்றரை வருஷமாக ரஞ்சித் பஸ்ஸில் வந்து செல்பவர்.. மடிச்சல் பகுதியை சேர்ந்த இந்த கல்லூரி மாணவி ரஞ்சித் பேசுவதை அப்படியே நம்பி உள்ளார். இந்த மாணவி ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்.. அதனால் அந்த ஏழ்மையையே பயன்படுத்தி கொண்டார்.. தனியாக ஒரு வீட்டை எடுத்து அங்கு பெண்ணை அழைத்து கொண்டு போய் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்... ஆனால் கல்யாணம் செய்யவில்லை.
இந்த விஷயம் முதல் மனைவி சுகந்திக்கும், 2 மகள்களுக்கும் தெரிந்துவிட்டது.. வீட்டுக்கே வராமல் இப்படி தனிக்குடித்தனம் நடத்துவதை கண்டு அதிர்ந்த சுகந்தி பளுகல் களியக்காவிளை எஸ்பி ஆபீசில் புகார் தந்தார்.. பிறகு கணவன் குடித்தனம் நடத்தி வரும் அந்த மாணவியின் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டார்.. குடும்பம் நடத்திவரும் தன் கணவனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
முதலிரவில்.. வளவளன்னு பேச்சு.. பொண்டாட்டியை கடப்பாறையால் அடித்து கொன்று.. மரத்தில் தொங்கிய கணவன்!
இதை பார்த்ததும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தனர்.. அந்த இடமே பரபரப்பாகிவிட்டது.. அப்போதும் அந்த மாணவி ரஞ்சித்தை விட்டு தர முடியாது என்று சொல்லி உள்ளார் போலும்.. உடனே சுகந்தியோ, "உன் வயசுல எனக்கு 2 பொண்ணுங்க இருக்காங்க... அவரை விட்டு விடு" என்று வாதம் செய்துள்ளார்.. அப்போதும் மாணவி வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார்.
இவர்கள் சண்டை அதிகரித்து கொண்டே போகவும், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசார் 2 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.. ஆனால் இவ்வளவு நடந்தும் ரஞ்சித்தை காணவில்லை.. தனக்காக 2 பேரும் அடித்து கொள்வதை கேள்விப்பட்ட அவர் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரைதான் போலீசார் முக்கியமாக தேடி வருகிறார்கள்.