கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஷிகா.. பேச மாட்டியா.. லவ்வை ஏத்துக்க மாட்டியா.. சோடா பாட்டிலை எடுத்து.. தன் கழுத்தையும் அறுத்து!

காதலியை கழுத்து அறுத்து கொன்ற காதலன் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: "ஆஷிகா பேச மாட்டியா.. என் லவ்வை ஏத்துக்க மாட்டியா" என்று கேட்ட காதலன், ஆஷிகாவின் கழுத்தை சோடா பாட்டிலால் அறுத்து கொன்றுவிட்டார்.. பிறகு அதே பாட்டிலால் தன் கழுத்தையும் அறுத்து கொண்டு இறந்துவிட்டார்.. இந்த சம்பவம் தமிழக - கேரள எல்லையில் நடந்து, இரு மாநிலத்தையுமே நிலைகுலைய வைத்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள பகுதி காரக்கோணம்.. இங்கு வசித்து வந்த பெண் ஆஷிகா.. வயசு 19.! பியூட்டிஷன் கோர்ஸ் படித்திருக்கிறார்.

kerala youth killed lover and committed suicide

நேற்று காலை திடீரென ஆஷிகா வீட்டிலிருந்து ஒரு அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் பதறிபோய் பார்த்தனர்.. அப்போது ஆஷிகா கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அவருக்கு பக்கத்தில் அதாவது இன்னொரு ரூமில் ஒரு இளைஞரும் கழுத்து அறுபட்டு உயிருக்கு போராடினார்.. 2 பேருக்குமே ரத்தம் கொட்டியது.. அதனால் இருவரையுமே மீட்டு பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.. ஆனால் 2 பேருமே உயிரிழந்துவிட்டனர்.

இது சம்பந்தமான விசாரணை ஆரம்பமானது.. சம்பந்தப்பட்ட நபர் பெயர் அனு.. அதே பகுதியை சேர்ந்தவர்தான்.. இவர்கள் ஸ்கூல் படிக்கும்போதே காதலித்து வந்துள்ளனர்.. அனு ஒரு பிரைவேட் பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.. ரொம்ப நாளாக காதலித்து வரவும், விஷயம் ஆஷிகா வீட்டுக்கு தெரிந்துவிட்டது.. அதனால் மகளை கூப்பிட்டு கண்டித்துள்ளனர்.. அனுவுடன் பேசுவதை ஆஷிகாவும் தவிர்த்துள்ளார்.. இதுதான் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

சிங்கப் பெண்ணே.. தீபிகா படுகோன் மாஸ்.. ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திற்கு வருகை.. மாணவர்களுடன் கைகோர்ப்புசிங்கப் பெண்ணே.. தீபிகா படுகோன் மாஸ்.. ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திற்கு வருகை.. மாணவர்களுடன் கைகோர்ப்பு

ஆஷிகா பின்னாடியே சுற்றி சுற்றி வந்தார் அனு.. தொடர்ந்து லவ் டார்ச்சர் தந்துகொண்டே இருந்தார்.. ஓயாமல் மகளுக்கு தொல்லை தரவும், போன ஏப்ரல் மாதம் ஆஷிகாவின் பெற்றோர் போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் அனுவை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினர்.

Recommended Video

    பெட்ரோல் பங்க் துணி மாற்றும் அறையில் பெண்களை.. ஆபாச படம் எடுத்த கொடுமை.. - வீடியோ

    ஆனாலும் அனு ஆஷிகாவை விடவே இல்லை.. நேற்று காலை 11 மணிக்கு ஆஷிகா வீட்டுக்கு அனு போயுள்ளார்.. தாத்தா, பாட்டி வீட்டில் இருந்தாலும், ஆஷிகா ரூமுக்கே அனு போய் தகராறு செய்துள்ளார். அப்போதுதான் மறைத்து வைத்திருந்த சோடா பாட்டிலால் ஆஷிகாவின் கழுத்தை அறுத்து, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தினால் கேரள - தமிழக எல்லையே அதிர்ந்து போயுள்ளது.

    English summary
    youth killed lover and committed suicide near kanniyakumari due to love issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X