படுக்கை விரிப்பினால் பிரச்சனை... லாட்ஜில் கலாட்டா செய்த மலையாள நடிகை
Recommended Video
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் வாடகை பாக்கி கேட்டதால் லாட்ஜில் திரைப்பட நடிகை ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் கடந்த சில வாரங்களாக மலையாள திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர், உதவியாளர்கள் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் அமைந்துள்ள தனியார் லாட்ஜில் தங்கி உள்ளனர்.
இவர்கள் தினமும் காலையில் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டு இரவில் லாட்ஜிற்கு திரும்புவது வழக்கம். அதன் படி, படப்பிடிப்பு முடிந்து படத்தின் டைரக்டர் மற்றும் நடிகர் நடிகைகள் லாட்ஜிற்கு திரும்பினார்கள். அப்போது லாட்ஜ் அறைக்க சென்ற மலையாள நடிகை அங்குள்ள படுக்கை விரிப்புகள் மாற்றபடவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்களிடம் நடிகை புகார் செய்தார். அதற்கு லாட்ஜ் ஊழியர்கள் லாட்ஜிற்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி 60,000 ரூபாயை இதுவரை தரவில்லை என்றும் அதனை தரும்படியும் கூறினர். இதை கேட்ட நடிகை தான் இந்த லாட்ஜில் இருந்து கிளம்புவதாக கூறி உடனடியாக அங்கிருந்து புறப்பட முயன்றார்.
அப்போது அவரை தடுத்த லாட்ஜ் ஊழியர்கள் உங்கள் படக்குழுவினரிடம் இருந்து பாக்கியை வாங்கி கொடுத்துவிட்டு இங்கிருந்து கிளம்புமாறு கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள் கோட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் நடத்திய விசாரணையில் மலையாள நடிகை திருவனந்தபுரம் ஆற்றுங்கால் பகுதியை சேர்ந்த மஞ்சு சவேர்கர் என்பது தெரியவந்தது. மேலும் படக்குழுவினர் லாட்ஜ் வாடகைபாக்கியை கொடுப்பதாக ஒப்புக் கொண்டதோடு இனி இது போன்ற சம்பவம் நடைபெறாது என போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தகராறு முடிவுக்கு வந்தது. இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.