கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெட்ரூம் உள்ளே புகுந்த போலீஸ்.. நடந்தது "அது".. நடத்தியது லதா.. அதிர்ந்து போன மார்த்தாண்டம்!

மகள்களை விபச்சாரத்தில் தள்ளிய தாய் அதிரடி கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ரெண்டு பெட்ரூம்களில் 2 மகள்கள்.. அவர்களுடன் 2 நபர்கள் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளனர்.. இதுக்கெல்லாம் காரணம் லதா தான்.. யார் இந்த லதா?

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேட்டுக்கடை என்ற பகுதி உள்ளது.. இங்கு ஒரு வீட்டில் எப்போது பார்த்தாலும் ஆண்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது.

இதை கவனித்த அந்த பகுதி மக்கள், தக்கலை ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. ஆனால் போலீசார் உடனடியாக களத்தில் இறங்காமல், சம்பந்தப்பட்ட வீட்டை கண்காணித்தனர்.

தலித் பெண்ணை தூக்கி சென்று.. சீரழித்து.. எலும்புகளை அடித்து நொறுக்கி.. நாக்கை வெட்டிய 4 பேர்! தலித் பெண்ணை தூக்கி சென்று.. சீரழித்து.. எலும்புகளை அடித்து நொறுக்கி.. நாக்கை வெட்டிய 4 பேர்!

நோட்டம்

நோட்டம்

அப்போதுதான், பொதுமக்கள் சொன்ன அந்த வீட்டுக்கு ஆண்கள் மட்டும் ஒவ்வொருவராக சென்று கொண்டு வந்து கொண்டிருந்ததை கவனித்தனர். அதற்கு பிறகு அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.. அப்போது, அந்த வீட்டில் இருந்த 2 வேறு வேறு ரூம்களில் சிறுமிகளுடன் 2 நபர்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த 2 நபர்களும் அரை நிர்வாண கோலத்தில் இருந்தார்களாம்.

ராஜ்மோகன்

ராஜ்மோகன்

போலீசாரை ரூமுக்குள் பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.. ஆனால், விரட்டி பிடித்து ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.. ஒருவர் பெயர் ராஜ்மோகன் என்பதும், மற்றொருவர் பெயர் சுனில் என்பதும் தெரியவந்தது. இந்த சுனில் என்பவர் ஒரு கூலி தொழிலாளி.

விபச்சாரம்

விபச்சாரம்

ஆனால், ராஜ்மோகன் என்பவர், வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் கணவராம்.. இதனால் போலீசார் மேலும் ஷாக் ஆனார்கள்... பிறகுதான் தெரிந்தது அந்த வீடு ஒரு விபச்சாரம் செய்யும் வீடு என்பது.. இதை நடத்தி வருவது லதா என்பவர்.. அவர் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர்.. விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது லதாவின் 2 பெண் குழந்தைகள்தானாம்.. இதை கேட்டு அடுத்த அதிர்ச்சியில் உறைந்தனர் போலீசார்.

மகள்கள்

மகள்கள்

வறுமை காரணமாக, 2 மகள்களையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.. இதற்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளார்.. அந்த வீட்டிற்கு தன்னுடைய மகள்களை அழைத்து சென்று பலரை அங்கு விபச்சாரத்துக்கு வரவழைத்துள்ளார்.. 2 சிறுமிகளும் ஸ்கூலில் படித்து வருகிறார்களாம்.. இவர்களை பணத்துக்காக, பல பேருக்கு இரையாக்கி வந்துள்ளார் லதா.

கைது

கைது

பெற்ற மகள்கள் மட்டுமில்லாமல், மகள்களின் தோழிகள் மேலும் 2 பேரையும் பணத்தாசை காட்டி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அந்த 4 சிறுமிகளையும் போலீசார் மீட்டு, ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு மெடிக்கல் செக்கப்புக்காக அனுப்பி வைத்தனர். இதுக்கெல்லாம் முக்கிய காரணமாக லதா மற்றும் இன்ஸ்பெக்டரின் கணவர் ராஜ்மோகன், சுனில் ஆகியோரை கைது செய்து செய்துள்ளனர். தொடர்ந்து லதாவிடம் விசாரணை நடத்தியும் வருகிறார்கள்.

English summary
Marthandam insepctor husband arrested for indulging in Prostitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X