வீடியோவில் படு நெருக்கம்.. அந்த விஐபி மனைவி யார்?.. பரபரக்கும் நாகர்கோவில் காசியின்.. லீலைகள்
நாகர்கோயில் காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது
கன்னியாகுமரி: காசியுடன் வீடியோவில் நெருக்கமாக இருந்த அந்த விஐபி மனைவி யார்? நடிகரின் மகள் யார்? போலீஸ் அதிகாரியின் மகள் யார்? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வரபோகிறது.. காசியை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது.. அதனால் காசி விவகாரம் சூடு பிடித்துள்ளது!!
Recommended Video
26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. சுகுனா சிக்கன் குமரி மாவட்ட டீலர்தான் காசி.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.
இதைதவிர, நில மோசடி வழக்கு, கந்துவட்டி புகார்களும் காசி மீது உள்ளன.. இதுவரை 17 வயது சிறுமி உட்பட 6 பேர் காசி மீது புகார் தந்துள்ளனர்.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.. அவரது லேப்டாப்களை பறிமுதல் செய்து விசாரணை நடக்கிறது. ஏற்கனவே காசியிடம் 3 நாள் போலீஸ் விசாரணை நடந்தது.
இந்த 3 நாள் விசாரணையிலும் காசி வாயே திறக்கவில்லை என்று கூறப்பட்டது.. போலீசாருக்கு சரியான முழு ஒத்துழைப்பும் தரவில்லை.. ஒவ்வொரு வார்த்தையையும் காசியிடம் இருந்து பிடுங்குவதற்கே போலீசார் படாதபாடு பட்டுள்ளனர்.. அந்த விசாரணையில் வெளிவந்த பெயர்தான் ஜினோ.. 19 வயது இந்த நண்பனை பற்றி சொல்லவும், அந்த நண்பனை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பெண்களை மிரட்டுவது, ஆபாச வீடியோ அப்லோடு செய்வது, என காசிக்கு எல்லா உதவிகளையும் இவர்தான் செய்து வந்துள்ளார்.. இதையல்லாம் கேட்டு போலீசாரே மிரண்டனர்.
காசியின் லேப்டாப்பில் பெண் டாக்டர்கள், பெண் என்ஜினியர்கள், சிறுமிகள், அவர்களின் அம்மாக்கள், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள், தொழிலதிபர்களின் மகள்கள் என இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சொல்லப்பட்டது.. இதையெல்லாம் விசாரிக்கவும், காசியுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பின்னணியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் யார் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விசாரிப்பதற்காக போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்திருந்தனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த தொட்டியம் வருவாய் ஆய்வாளர் உடலுக்கு திருச்சி ஆட்சியர் மரியாதை
இந்நிலையில் கன்னியாகுமரி மகளிர் காவல்நிலையத்தில் காசிமீது போடப்பட்ட போக்சோ வழக்கிற்காக ஜெயிலில் சிறையில் இருந்து 6 நாட்கள் காவலில் எடுத்து கன்னியாகுமரி மகளிர் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 3 நாட்கள் விசாரணை செய்யப்பட்ட நிலையில் இப்போது 2-வது முறை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று வரவும், பல்வேறு தகவல்கள் பகீர் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.