கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆபாச காசி" வாயை திறப்பாரா.. கக்குவாரா உண்மைகளை.. காவலில் எடுக்க போலீஸ் மனு.. நாளை விசாரணை

காசியை 10 நாள் போலீஸ் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ஆபாச காசி வசமாக சிக்க போகிறார்.. காசியுடன் வீடியோவில் நெருக்கமாக இருந்த அந்த பெண்கள் யார்? ஆபாச வீடியோக்களில் இருந்த சிறுமிகள் யார்? அந்த விஐபி மனைவி யார்? நடிகரின் மகள் யார்? போலீஸ் அதிகாரியின் மகள் யார்? என்பது குறித்த தகவல்கள் மொத்தமும் விரைவில் வரபோகிறது.. காரணம், காசியை நம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்

26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

nagercoil kasi: nagarcoil kasi take 10 days custody CBCID Petition to court

இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.. 2 முறை போலீஸ் காவலிலும் விசாரிக்கப்பட்டார்.

முதல்முறை, 3 நாள் விசாரணையும், அடுத்த 2வது முறையாக 6 நாள் விசாரணையும் நடந்தது.. ஒருசில முக்கிய தகவல்கள் இவரிடம் அப்போது பெறப்பட்டதாக கூறப்பட்டது. காசியின் லேப்டாப்பில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுமி முதல் கல்யாணம் ஆன பெண்கள் வரை சீரழித்துள்ள காசிக்கு பல விஐபிக்கள் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியபடியே இருந்ததை அடுத்து, வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.. வழக்கு தொடர்பான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன... எப்ஐஆர் நகல்களும் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணையை உடனடியாக ஆரம்பித்தனர்.

 முதலிரவில்.. சந்தியா உள்ளே நுழைந்ததும் ஏன் அலறினார்.. ரூமுக்குள் என்னதான் நடந்தது.. காட்டூர் பரபர! முதலிரவில்.. சந்தியா உள்ளே நுழைந்ததும் ஏன் அலறினார்.. ரூமுக்குள் என்னதான் நடந்தது.. காட்டூர் பரபர!

இந்நிலையில்தான் காசியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.. ஏற்கனவே காசியுடன் அவரது நண்பர் 19 வயது ஜினோவும் கைதாகி உள்ளார்.. இவர்கள் 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க போகிறார்கள்.. இதற்காக நாகர்கோவில் கோர்ட்டில் நாளை மனு தாக்கல் செய்யவும் உள்ளனர். இதனால் காசி தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவரும், முக்கிய புள்ளிகளும் வசமாக சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிரவில்.. சந்தியா உள்ளே நுழைந்ததும் ஏன் அலறினார்.. ரூமுக்குள் என்னதான் நடந்தது.. காட்டூர் பரபர!

English summary
nagercoil kasi: nagarcoil kasi take 10 days custody CBCID Petition to court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X