கழுத்து அறுபட்ட நிலையில் புது மாப்பிள்ளையின் பிணம்.. என்ன நடந்தது.. பதட்டத்தில் இரணியல்
இரணியல்: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது ஆணவக் கொலையா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முக்கலம்பாடு பகுதியில் உள்ள குளத்தின் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இரணியல் போலீசார் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள கடேற்றி பகுதியை சேர்ந்த விஜீஸ் (31) என்று தெரிய வந்தது. இதனையடுத்து குளச்சல் உட்கோட்ட ஏ.எஸ்.பி.கார்த்திக் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏன் இந்தக் கொலை
விஜீஸ் கொலையுண்ட இடத்தில் கத்தி உள்ளிட்ட எந்த ஆயுதமும் சிக்கவில்லை. அந்த இடத்தில் கொலையாளிகள் எதையும் விட்டுச் சென்றிருக்கவில்லை. இதனால் போலீஸாருக்குக் குழப்பம் ஏற்பட்டது.
[ஜமாலை கொன்றுள்ளனர்.. ஆனால் உடல் எங்கே என்று தெரியவில்லை.. சவுதி தகவலால் சர்ச்சை ]
கொலை செய்து கொண்டு வந்தனரா
இதனால் விஜீஸை வேறு இடத்தில் வைத்துக் கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கோணத்தில் தற்போது போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
காதலித்து மணம்
விஜீஸ் காதல் கல்யாணம் செய்து கொண்டவர். 5 -மாதங்களுக்கு முன் தான் காதலித்த பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை பெண் வீட்டாரின் சம்மதம் இன்றி கடத்தி திருமணம் செய்துள்ளார்.
பெண் வீட்டாருக்குத் தொடர்பா
எனவே அந்த காரணத்தினால் இந்த கொலை நடந்திருக்கலாமோ என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆணவக் கொலையா இது என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.