பாரத மாதா, பிரதமர் மோடி குறித்து பாதிரியார் பொன்னையா விமர்சனம்: கன்னியாகுமரியில் மேலும் ஒருவர் கைது
கன்னியாகுமரி: பாரத மாதா, பிரதமர் மோடி குறித்து இழிவாக விமர்சித்துப் பேசிய சர்ச்சையில் அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சர்ச்சையில் ஏற்கனவே பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் சர்சைக்குரிய வகையில் பாரதமாதா , இந்து மதம் , மத்திய- மாநில அரசுகள் குறித்து பங்கு தந்தை ஜார்ன் பொன்னையா இழிவாக பேசினார் என்பது குற்றச்சாட்டு.
இதனால் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மதுரையில் தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
இந்த நிலையில் இன்று சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியின் கூட்ட ஒருங்கிணைப்பாளரும், அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளருமான ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்ற போது தனிப்படை போலீசாரால் தமிழக - கேரளா எல்லையான காரோடு பகுதியில் கைது செய்யபட்டார்.