பிரதமர் மோடி தமிழகத்தில் இன்று துவக்கி வைத்த நலத் திட்டங்கள் இவைதான்
கன்னியாகுமரி: தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, பல நலத்திட்டங்களை இன்று துவங்கி வைத்தார்.
அந்த திட்டங்கள் குறித்த ஒரு பார்வை: செட்டிக்குளம் - மதுரை , செட்டிகுளம் - நத்தம் இடையே சாலைக்கு அடிக்கல் நாட்டினார் மோடி.
பனகுடி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையையும் மோடி திறந்து வைத்தார். மார்த்தாண்டம் - பார்வதிபுரம் மேம்பாலத்தையும் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
ஊழல்வாதிகள் பயப்படுகிறார்கள்.. எங்கள் அதிரடி தொடங்கிவிட்டது.. குமரியில் மோடி வார்னிங்!
சென்னை - மதுரை இடையே தேஜஸ் விரைவு ரயிலை தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து சென்னைக்கு இனி 6.30 மணி நேரத்தில் இதில் பயணம் செய்யலாம்.
இதேபோல, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயிலை தொடங்கி வைத்தார். பச்சைக் கொடி அசைத்து ரயில் சேவையை மோடி திறந்து வைத்தார். இதன்பிறகு கன்னியாகுமரியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.