கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மார்ச் 1ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் மோடி… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக பிரதமர் மோடியின் கன்னியாகுமரி விழா நடைபெறும் மைதானத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பல்வேறு இடங்களுக்குச்சென்று புதிய திட்டங்களையும் அறிவித்து பணிகள் முடிந்த திட்டங்களையும் துவக்கி வைத்து வருகிறார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி 19ம் தேதி வருவதாக இருந்த நிகழ்ச்சியானது மார்ச் 1ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

police protection has been beefed up in kanyamumari for prime minister modis function

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் மைதானத்தில் பிரதமர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் பந்தல் மற்றும் பிரமாண்ட மேடை அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தாமரை வடிவிலான சிற்பமும் அமைக்கப்பட்டு வருகிறது.

police protection has been beefed up in kanyamumari for prime minister modis function

அவர் வரும் நாள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே 24 மணிநேரமும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மைதானத்தின் 4 பக்கமும் துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

police protection has been beefed up in kanyamumari for prime minister modis function

பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளுக்கு கொண்டுவரும் பொருட்களும் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு தீவிர சோதனைக்கு பின்னரே அவை மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

English summary
Police protection has been beefed up in kanyamumari for Prime Minister Modi's Function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X