கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் கேரளா எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இரவுப் பணியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் இருந்துள்ளார்.
அப்போது மர்ம கும்பல் ஒன்று வில்சனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. தப்பிய அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா வீரர்கள் உயிரிழக்கவில்லை- ஈரானுக்கு "வார்னிங்" - யு.எஸ் அதிபர் டிரம்ப்
கன்னியாகுமரி பகுதியில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English summary
According to the sources, Police Sub inspector shot dead in Kanyakumari.
Story first published: Wednesday, January 8, 2020, 22:39 [IST]