பிரிந்து போன காதலி.. வருத்தத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு போலீஸ்காரர் தற்கொலை
தன்னை தானே சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி: பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்த போலீஸ்காரர், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார்!
கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் அஜின் ராஜ். இவருக்கு 28 வயதாகிறது. இவர் 2018ல் காவலர் பணிக்கு சேர்ந்து நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கோதையாறு மின்உற்பத்தி மைய பாதுகாப்புப் பணியில் அஜின் ராஜ் அமர்த்தப்பட்டிருந்தார். அப்போது, பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் உடன்பணி புரிந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பேச்சிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 21 நாள்கள் லீவில் இருந்த அஜின் சில தினங்களுக்கு முன்புதான் வேலைக்கு வந்தாராம். மேலும் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு பிரிந்து உள்ளதாகவும், அந்த கவலை காரணமாகவே இப்படி தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட தகவல் கூறுகிறது. எனினும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஓஎம்ஆரில் மாஸ் வசதிகளுடன் ஃபிரிடம் ஆப் பிராவிடண்ட் அபார்ட்மெண்ட்.. தமிழ் புத்தாண்டு சிறப்பு சலுகை!