கன்னியாகுமரியில் பிரசாரத்தின்போது தொடர்ந்து ஹாரன் அடித்ததால் பிரேமலதா கோபம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பிரசாரத்தின் போது தொடர்ந்து ஹாரன் அடித்ததால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கோபமடைந்தார்.
அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது தேமுதிக. இந்நிலையில் சொந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தது போக கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி கன்னியாகுமரி எம்பி தொகுதியில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அப்போது அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிடுவார்... பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு
சலசலப்பு
அவர் பேச முற்பட்டபோது வாகன ஓட்டிகள் சிலர் ஹாரன் அடித்து அவர் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அப்போது பிரேமலதா பேசுகையில் நாங்கள் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.
அனுமதி
இதெல்லாம் வேற எங்கயாவது கொண்டு போய் வச்சுகங்க. இங்க நடக்காது அதெல்லாம். உரிய முறையில் அனுமதி வாங்கி மக்களை நாங்கள் சந்திக்க வந்துள்ளோம்.
கோழை
எங்களை தடுக்கிற அதிகாரம் எந்த கொம்பனுக்கும் கிடையாது. முதுகிற்கு பின்னாடி நின்னு ஹாரன் அடிச்சா உங்களை மாதிரி கோழை வேறு யாரும் இல்லை என்று ஆவேசமாக பேசினார்.
போலீஸார்
இதையடுத்து அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஹாரன் அடித்த ஒரு இளைஞரை போலீஸார் அழைத்து சென்றனர்.