கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்கள் சேவையில் வசந்தகுமாரின் அர்ப்பணிப்புகள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருக்கும்.. ராகுல் இரங்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் காலமானதை அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக இருந்தவர் வசந்தகுமார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Rahul Gandhi expressed his condolence for H Vasanthakumar

இந்த நிலையில் அவரது உடல்நிலை இன்று மதியம் முதலே கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மேலும் மோசமானதால் அவர் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 70.

அவரது இறப்புக்கு பிரதமர் மோடி, பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கன்னியாகுமரி எம்பி எச் வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் இறந்தார் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சர்பத் விற்ற வசந்த்குமார் சாம்ராஜ்யம் உருவாக்கிய கதை... வெள்ளுடை வேந்தரின் மறுபக்கம்..! சர்பத் விற்ற வசந்த்குமார் சாம்ராஜ்யம் உருவாக்கிய கதை... வெள்ளுடை வேந்தரின் மறுபக்கம்..!

Recommended Video

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட Congress MP Vasantha Kumar மரணம்

    காங்கிரஸின் சித்தாந்தமான மக்கள் சேவையில் அவரது பங்களிப்பு எப்போதும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என வசந்தகுமாரின் புகைப்படத்துடன் ராகுல் கருத்து பதிவிட்டுள்ளார்.

    English summary
    Congress Ex President Rahul Gandhi expressed his condolence for H Vasanthakumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X