கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி!
கன்னியாகுமரி: தமிழ் மொழியை தமிழகத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழூர்திப் பயணம் இன்று துவங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தமிழுக்கு முதன்னை வேண்டும். துறைதோறும் தமிழ் வேண்டும். தமிழ் வாயிலாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உலக பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில் கடந்த 26 வருடங்களாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழூர்திப் பயணம் நடைபெற்று வருகிறது.
இதே போல் இந்த வருடமும் 27வது ஆண்டாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் சென்னை கோட்டை வரையிலான தமிழூர்திப் பயணம் துவங்கியது.
அமைப்பின் தலைவர் முனைவர் சேதுராமன் நடைபெறும் இந்த தமிழூர்திப்பயணம் 3ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. இந்த பயணத்தில் தமிழ் அறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.