"ரிகர்சல்" பார்க்கலாமா.. போன் போட்ட இளைஞர்.. தென்னந்தோப்பில் வைத்து கும்மி எடுத்த பெண்!
இளைஞரை ஒரு இளம்பெண் சரமாரியாக அடித்த வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
கன்னியாகுமரி: "முதலிரவுக்கு ரிகர்சல் பார்க்கலாமா" என்று கேட்ட இளைஞரை, தென்னந்தோப்புக்கு வர செய்து கட்டிவெச்சி உதைத்துள்ளார் சம்பந்தப்பட்ட இளம் பெண்.. இளைஞரை அந்த பெண் கும்மி கும்மி எடுக்கும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பழக்கடை நடத்தி வருகிறார். 35 வயதாகிறது! கல்யாணம் ஆகி 2 பொண்ணுங்க இருக்கிறார்கள். இவர், அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஒரு வீட்டில்தான் வழக்கமாக தன் கடைக்கு வாழை குலை வாங்குவார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவரின் அறிமுகம் கிடைக்கவும், சாதாரணமான முறையில் பழகி வந்துள்ளனர். இந்த பெண்ணுக்கு வீட்டில், அடுத்த மாதம் கல்யாணம் வைத்துள்ளனர். இந்த விஷயத்தை அந்த இளைஞரோ, பெண்ணுக்கு போன் செய்து, "அடுத்த மாசம் கல்யாணமாமே.. அதுக்கு முன்னாடி ஒத்திகை பார்ப்போமா? நிறைய விஷயங்களை உனக்கு கத்து தருகிறேன்" என்று கேட்டுள்ளார்.
இளைஞர்
இதை கேட்டதும் ஷாக் ஆன அந்த பெண், இளைஞரிடம் தன் ஆத்திரத்தையும், எரிச்சலையும் காட்டி கொள்ளவில்லை. அதனால், வீட்டு பக்கம் உள்ள தென்னந்தோப்புக்கு வருமாறு சொன்னார். இளைஞரும் துள்ளி குதித்து ஓடிவந்தார்.
தென்னை மட்டை
கையில் செல்போனுடன் கோவை சரளாவாக உருமாறி நின்றிருந்த பெண்ணோ, அடி வெளுக்க ஆரம்பித்தார். செல்போனில் வீடியோவை ஆன் செய்துவிட்டு, கையில் கிடைத்த தென்னை மட்டை, விறகு கட்டை, காய்ந்த குச்சி, தொடப்பக்கட்டை.. இன்னும் என்னென்ன பொருட்கள் அங்கு இருந்ததோ எல்லாவற்றையும் எடுத்து வீச, மிரண்ட இளைஞரோ தப்பித்து ஓடினார்.
ரிகர்சல்
ஆனால் இளம்பெண் விடவில்லையே... நில்லுடா.. எங்கேடா ஓடறே என்று சொல்லி கொண்டே விரட்டி பிடித்து அவரது சட்டையை இழுத்து பிடித்தார். "ரிகர்சல் பார்க்க, உன் பொண்ணு, உன் தங்கச்சியை அனுப்பி வெப்பியா.. என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது" என்று கேள்வி கேட்டு சரமாரியாக உதைத்தார். வீடியோ ஒரு பக்கம், அடி ஒரு பக்கம் என சிக்கி கொண்ட இளைஞர், வீடியோ எடுக்காதே என்று கெஞ்சுகிறார்.
நில்லுடா..
"நில்லு.. ரகசியமா அடி வாங்கிறியா, ஊருக்கே தெரிஞ்சி அடி வாங்குகிறீயா.. நீ செத்தாலும் செத்து போ.. உன்னை அடிக்காமல் என் ஆத்திரம் தீராது. வா இங்கே.. பத்து அடியாவது வாங்கிக்கோ.. ஆல்ரெடி இந்த ரெக்கார்டை எங்க வீட்டுக்கு அனுப்பிட்டேன்.. கால்ல விழாதே.. அமைதியா அடி வாங்கு.. இப்பதானே உன் பொண்ணுக்கு சடங்கு நடத்தினே.. வயசுக்கு வந்த பொம்பள பிள்ளையை வெச்சிட்டு இருக்கிற நீ... ஏன் இப்படி அலைகிறாய்.. நீ செத்து போ.. தள்ளி போ.. என்னை பார்த்தால் அயிட்டம் மாதிரி தெரியுதா?" என்று இளம்பெண் அசால்ட் காட்டுகிறார். கெட்ட கெட்ட வார்த்தைகள் நடுநடுவே மானே, பொன்மானே போல வந்து போகிறது.
இந்த வீடியோ கிட்டத்தட்ட 6 நிமிஷங்கள் ஓடுகிறது. இந்த வீடியோ, சமூக வலை தளங்களிலும் வைரலாகி வருகிறது.