செத்து போன்னு அம்மா சொல்றாங்க.. செத்துட்டா என்ன செய்வே.. காதலனிடம் கேட்கும் பெண்.. வைரல் ஆடியோ
காதல் விவகாரத்தில் இளம் பெண் மர்ம மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது
கன்னியாகுமரி: "செத்து போ.. செத்து போ..ன்னு என் அம்மா சொல்றாங்க.. அப்படி நான் செத்துபோயிட்டா நீ என்ன செய்வே" என்று இளம்பெண் காதலனிடம் கேட்கும் ஆடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருவதாக கூறப்படுவது பரபரப்பை தந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பகுதி ஆரோக்கியபுரம். இங்கு வசித்து வந்த 18 வயது இளம்பெண் அனுஷ்யா. ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் போன 24ம் தேதி அனுஷ்யா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக போலீஸ் விசாரணையில், "என் மகள் வீட்டில் இருந்து 23ம் தேதி 2000 ரூபாயை திருடிட்டாள்.. அதுக்காக நான் சத்தம் போடவும், எலி மருந்தை குடிச்சி தற்கொலை செய்துக்கிட்டாள்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசாரும் அனுஷியாவின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சமயத்தில்தான், அனுஷியாவின் தோழிகள் பகீர் தகவல்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குகளில் வெளியிட்டனர். அதில், அனுஷியாவின் தற்கொலை செய்யவில்லை.. அது கொலை என்று பதிவிட்டதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அனுஷ்யா ஒரு இளைஞனை காதலித்தாராம்.. அந்த இளைஞன் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாகவும் தோழிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நிர்வாண வீடியோவை நான்தான் கேட்டேன்.. என்னை தவிர்த்தார்.. பேஸ்புக்கில் போட்டேன்.. அதிர வைத்த இளைஞர்
இதனிடையே அனுஷ்யா தன்னுடைய காதலனுடன் பேசும் ஆடியோ ஒன்றும் இணையத்தில் பரவியுள்ளது. அதில், "என்கிட்ட என் அம்மா பேசும்போதெல்லாம் 'செத்துப்போ' செத்துப்போ'ன்னு சொல்றாங்க.. அதனால் எனக்கு தற்கொலை செய்துக்கலாமான்னு தோணுது.. அப்படி நான் தற்கொலை செய்துக்கிட்டால், நீ என்ன செய்வே?" என்று அந்த ஆடியோவில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அனுஷ்யாவின் தோழிகள் இந்த மரணம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.