கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் கணவரின் மனைவி என் அம்மாதான்.. அதிர வைத்த 2 குழந்தைகளின் தாய்.. போலீஸை நாடிய கணவர்!

தன்னை ஏமாற்றிய மனைவி மீது கணவன் புகார் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    என் கணவரின் மனைவி என் அம்மாதான்.. அதிர வைத்த 2 குழந்தைகளின் தாய்..

    கன்னியாகுமரி: கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார் 2 குழந்தைகளின் தாய்... ஆனால் "என் புருஷனுக்கு மனைவி என் அம்மாதான்" என்று பாயிண்ட் பாயிண்டாக பேசி போலீசாரையே கதிகலங்க வைத்துள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஒரு சமையல்காரர். கல்யாணமாகி 10 வருடமாகிறது.. ப்ரீத்தி என்ற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் குடும்ப வறுமை காரணத்தால் வேலைக்கு வெளிநாடு போய்விட்டார் ரமேஷ்.

    2017 -ம் வருஷம் சமையல் வேலைக்கு துபாய் சென்றார். 2 வருடம் கழித்து, சமீபத்தில் ஊர் திரும்பினார். அப்போது, வீட்டில் 2 குழந்தைகளையும் பூட்டி வைத்து விட்டு ப்ரீத்தி வெளியே சென்றுள்ளதாக தெரிகிறது. இரவு வீட்டிற்கு வந்த மனைவியிடம், "எங்கே போய்ட்டு வர்றே" என்று ரமேஷ் கேட்டுள்ளார். இது தகராறாக வெடித்துள்ளது.

    புது தாலியின் ஈரம்.. மனைவியுடன் 6 மணி நேரம்.. ஜெயிலுக்குள் துருவ் சந்தோஷம்.. அம்மாவுக்கு நிம்மதி!புது தாலியின் ஈரம்.. மனைவியுடன் 6 மணி நேரம்.. ஜெயிலுக்குள் துருவ் சந்தோஷம்.. அம்மாவுக்கு நிம்மதி!

    இஷ்டம் இல்லை

    இஷ்டம் இல்லை

    இந்த பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. ஆனால் ப்ரீத்தி இதையே சாக்காக வைத்து கொண்டு, கணவர், குழந்தைகளுடன் வாழ இஷ்டம் இல்லை.. தனியாக வாழ விரும்புவதாக சொன்னார். இதைக் கேட்டு ரமேஷ் அதிர்ச்சி அடைந்தாலும், பலமுறை ப்ரீத்தியை சமாதானம் செய்து வாழ கூப்பிட்டார். ஆனால் முடியவில்லை. இந்நிலையில், பிரீத்தி இளைஞர் ஒருவருடன் தனியாக வசித்து வருவதாக ரமேஷூக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ந்து போன ரமேஷ், குழித்துறை மகளிர் போலீசில் புகாரளித்தார். ஆனால் அங்கும் ப்ரீத்தி பிடிவாதம் பிடித்தார்.

    கல்யாணம்

    கல்யாணம்

    அதனால் ரமேஷ், மாவட்ட எஸ்பியிடம் ஒரு புகார் அளித்தார். அதில் "எனக்கு ப்ரீத்தியுடன் கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் அதை மறைத்து, மோசடியாக முளகுமூடு காடுவெட்டி பகுதியை சேர்ந்த 26-வயதான அகில் என்ற இளைஞரை ப்ரீத்தி கடந்த 28-ம் தேதி சர்ச்சில் வைத்து தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டுள்ளார். தன்னை திருமணம் செய்ததை மறைத்து மீண்டும் மோசடியாக கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.

    அம்மாதான் மனைவி

    அம்மாதான் மனைவி

    இதுகுறித்து போலீசார் பிரீத்தியிடம் விசாரித்தனர். அதற்கு அவர், "நான் ரமேஷை முறையாக கல்யாணம் செய்யவில்லை. கல்யாணம் செய்து தரும்போது எனக்கு வயசு 15தான். ரிஜிஸ்டர் ஆபீசில், என் அம்மாவின் பெயர், அவரது சர்ட்டிபிகேட், அவரது போட்டோக்களை ஒட்டிதான் கல்யாணம் ஆனது. அதனால் சட்டப்படி என் அம்மாவையே அவர் கல்யாணம் செய்துள்ளார். அவருடன் வாழ்ந்து 2 குழந்தைகளுக்கும் நான் தாயானாலும், இப்போது அகிலுடன் செய்து கொண்ட கல்யாணம்தான் சட்டபடி செல்லும். சட்டபடி நாங்கள் பார்த்துக்கொள்வோம்" என்றதும் போலீசார் விழிபிதுங்க விழித்தனர்.

    பரிதாப குழந்தைகள்

    பரிதாப குழந்தைகள்

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படியே கணவனும் மனைவியும் மாறி மாறி தகராறு, வாக்குவாதம் செய்து வருகின்றனர். ஆனால் அந்த இரு குழந்தைகளும் எதுவுமே புரியாமல் அம்மாவை பார்த்தபடியே பரிதாபமாக நிற்கின்றனர்.

    English summary
    young woman married 2 husband near kanniyakumari and husband complaint on her
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X