"அதில்" நாட்டமே இல்லாமல் இருந்த ராமு.. அப்செட்டான திவ்யா.. தாலியை கொடுத்து விட்டு கிளம்பினார்!
மனைவியை காணவில்லை என்று கணவர் புகார் தந்துள்ளார்
கரூர்: கல்யாணம் ஆகி 3 மாசமாச்சு.. ஆனால், தாம்பத்திய உறவில் கணவருக்கு இஷ்டமே இல்லை.. அதனால், புதுப்பெண் தாலியை கழட்டி வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்!
கரூர் மாவட்டம் தரகம்பட்டியை சேர்ந்தவர் ராமு.. ஒரு தனியார் பாலிடெக்னிக் காலேஜில் டிரைவராக உள்ளார்.. இவருக்கும், வடமதுரை பிலாத்கிராமத்தை சேர்ந்த திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த நவம்பர் 1ம் தேதி கல்யாணம் நடந்தது.
இந்நிலையில் 2 நாளைக்கு முன்பு திவ்யாவை காணோம்.. தாலி, கம்மல், மூக்குத்தி என அவர் அணிந்திருந்த நகைகள் மட்டும் வீட்டில் இருந்தது. இதனால் பதறிபோன ராமு, பல இடங்களில் மனைவியை தேடினார்.. எங்குமே கிடைக்கவில்லை.. அதனால், சிந்தாமணிப்பட்டி ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அப்போது, ராமுவிடம்தான் முதல் விசாரணையே நடந்தது.. பிறகு போலீஸ் தரப்பில் இதை பற்றி சொல்லும்போது, ராமு சரியாக வீட்டுக்கு போகாமல் இருந்துள்ளார்.. திவ்யாவிடம் நெருக்கமாக இல்லை... தாம்பத்தியத்தில் நாட்டம் காட்டாமலும் இருந்துள்ளார்.. இதை பற்றி திவ்யாவே ராமுவிடம் பலமுறை கேட்டும், ராமு அதற்கு சரியான பதிலை சொல்லவில்லை போல் தெரிகிறது.
நான் பூவெடுத்து வெக்கணும்.. முரளி பாட.. ஆசை அதிகம் வச்சு.. பெண் டான்ஸ் போட.. ரெண்டும் ஓடிபோய்ருச்சு!
இதனால் விரக்தியில் இருந்துள்ளார் திவ்யா.. இதன்காரணமாகவே கோபித்து கொண்டு பலமுறை அம்மா வீட்டுக்கும் போய்விடுவாராம்.. அவர்களும் மகளை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்து கணவர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
இப்போது தாலியை கழட்டி வைத்துவிட்டு திவ்யா சென்றுவிட்டதால், விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் திவ்யா வீட்டை விட்டு போனதற்கு காரணம், தாம்பத்ய உறவு மட்டும்தானா, அல்லது வேறு எதுவும் காரணமா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.