நாடு நல்லா இருக்கணுமா.. அப்ப செந்தில் பாலாஜியை ஓரங்கட்டுங்க.. இது ஜக்கம்மா வாக்கங்க ஜக்கம்மா வாக்கு!
Recommended Video
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு குடுகுடுப்பைகாரர் போல் அதிமுக நிர்வாகி ஒருவர் வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அரவக்குறிச்சியில் வரும் மே 19-ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஏற்கெனவே அத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்த செந்தில் பாலாஜி தற்போது திமுக வேட்பாளராக களம் காண்கிறார்.
இவரை எதிர்த்து செந்தில்நாதன் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தேர்தல் தேதி அறிவித்தவுடன் அதிமுக, திமுக ஆகியன பம்பரம் போல் சுழன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன.
நூதன பிரசாரம்
இந்த இடைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடும் என்பதால் வேட்பாளர்கள் சுழன்று சுழன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் அரவக்குறிச்சியில் மக்கள் ஒரு நூதன பிரசாரத்தை சந்தித்தனர்.
ஜக்கம்மா வாக்கு
பொதுவாக குடுகுடுப்பைகாரர் வாக்கு பலிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அதை பயன்படுத்தி அதிமுக நிர்வாகி ஒருவர் வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். குடுகுடுப்பைகாரர் வேடத்தில் சென்ற அவர் பொதுமக்களிடம் ஜக்கம்மா வாக்கு என கூறினார்.
செழிப்பா
அவர் பேசுகையில்ஜெயித்தவுடன் தொகுதிகளுக்கு அடிக்கடி வருவார்கள் (ஜெயித்தவுடன் தொகுதி பக்கமே வருவதில்லை என வாக்காளர் குற்றச்சாட்டுக்கு பதில்) புள்ளக்குட்டிகள் எல்லாம் செழிப்பா இருக்க வேண்டும், நாடு நல்லாயிருக்க வேண்டும்.
இது ஜக்கம்மா வாக்கு
எதிரிகளோட, துரோகிகளோட பார்வை உங்கள் மேல பட்டுடிச்சி. செந்தில் பாலாஜியோட பார்வையிலிருந்து நீங்கள் விலக வேண்டும். அதற்காக நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க. இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். இது ஜக்கம்மா வாக்குங்க ஜக்கம்மா வாக்கு என்றார் அந்த நிர்வாகி.