"விக்னேஷ்வரி" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை!
ராகிங் கொடுமையால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
கரூர்: விக்னேஷ் என்ற மாணவனை விக்னேஸ்வரி என்று சொல்லி ராகிங் செய்துள்ளனர் சீனியர்கள். இதனால் மனசு உடைஞ்சு போன விக்னேஸ்வரன் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார்!
கரூர் தாந்தோன்றி மலையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் லீவு முடிந்து இப்போதுதான் வகுப்புகள் தொடங்கியது.
முதலாமாண்டு வகுப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இதில் கரூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ், செல்வகுமார் இருவரும் சேர்ந்துள்ளனர்.
புதுசாக காலேஜ்-க்கு வந்ததால், அவர்களை 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிவசக்தி, நந்தகுமார் ராகிங் செய்துள்ளனர். குடிக்க தண்ணீர் கொண்டு வரும்படி ரேகிங் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விக்னேஷை, விக்னேஷ்வரி, விக்னேஷ்வரி என்று அனைவர் முன்னாடியும் கிண்டல் கேலி செய்துள்ளனர். இதனால் அவமானமும், மனவேதனையும் அடைந்த விக்னேஷ், எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். மயங்கி விழுந்து கிடந்த அவரை, அருகில் இருந்தோர், கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் விக்னேஷ் உள்ளார்.
இது குறித்து செல்வகுமார் தாந்தோன்றிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சிவசக்தி, நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ராகிங் கொடுமையால் மாணவர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.