ஓட்டு கேட்க சென்ற தம்பிதுரை... விரட்டியடித்த கிராம மக்கள்
கரூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறையில் வாக்கு கேட்க சென்ற கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில 40 தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கரூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குஜிலியம்பாறை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்னைக்கு வேணும்னா...பாஜக, காங். இலவசங்களை அறிவிக்கலாம்.. ஆனால் அதுக்கு விதை நாம போட்டது!
அவர் குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டை என்ற கிராமத்திற்கு சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தம்பிதுரை வாக்கு சேகரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், கிராமத்துக்கு தேவையான குடிநீர் திட்டங்களை செயல்படுத்தவில்லை என அவர் மீது குற்றம்சாட்டினார்கள்.
அப்போது தம்பித்துரை பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றார். மேலும் குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார். எனினும் மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.