செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி.. அரசியல்வாதி அல்ல.. முதல்வர் பழனிசாமி காட்டம்
கரூர்: அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும் அவர் அரசியல்வாதி அல்ல எனவும் முதலமைச்சர் பழனிசாமி காட்டமாக கூறினார்.
அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி என்று விமர்சனம் செய்தார்.
செந்தில் பாலாஜிக்கு இந்த இடைத்தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார். செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும் அவர், அரசியல்வாதி அல்ல எனவும் கூறினார்.
ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதி... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் வேட்பாளர் செந்தில்பாலாஜி தான்; மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக எம்.எல்.ஏவாக நினைக்கிறார் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி மாணவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கவில்லை; திறமை அடிப்படையில் டெல்லியில் தமிழர்கள் இடம்பெறுகின்றனர் என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்தார்.