அரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்!
அரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் முக ஸ்டாலின் டீ குடித்தார்
கரூர்: முக ஸ்டாலின், செந்தில்பாலாஜி, ஜோதிமணி என எல்லாரும் ஒரே டீக்கடைக்குள் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருந்ததை புன்னகைத்தவாறே தொகுதி மக்கள் பார்த்து சென்றனர்!
அதற்கு முன்பு எப்படியோ தெரியாது.. நமக்கு நாமே பயணத்தின்போது ஸ்டாலின் டீக்கடைக்குள் டீ குடிப்பது ஃபேமஸ் ஆனது. இதன்பிறகு கிராம சபை கூட்டங்களில் பங்கேற்கும் டீக்கடையில் உட்கார்ந்து அனைவரிடமும் சகஜமாக பேசி டீ குடித்து வந்தார்.
ஆனால் இதற்குதான் எத்தனை எத்தனை விமர்சனங்கள் எழுந்தன. நம் மாநில முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஏன் ராகுல் காந்திகூட இன்னமும் மாவட்ட மக்களை சந்திக்க போகும்போதெல்லாம் டீ குடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் ஸ்டாலின் டீ குடிப்பதை மட்டும் தொடர்ந்து விமர்சித்து வருவது காரணம் தெரியவில்லை. அதிலும் சீமான்தான் ஸ்டாலின் டீ குடிப்பதை அதிகமாகவே கிண்டலடித்தவர்.
இருந்தாலும் எதை பற்றியும் ஸ்டாலின் கவலைப்படவே இல்லை. யார் என்ன சொன்னாலும், தனக்கான விஷயத்தை கைவிடவே இல்லை. நேற்றுகூடஅரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அரவக்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்த ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்த சொல்லி கடைக்குள் சென்றார்.
ரஜினிகாந்த், ஜிகே வாசன், ஒருங்கிணைந்த அதிமுக.. இத்தனை முதுகில் சவாரி செய்ய போராடும் பாஜக!
அவருடன் அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி, கரூர் எம்பி ஜோதிமணி, நன்னியூர் ராஜேந்திரன் எல்லாரும் சென்றார்கள். ஆளுக்கு ஒரு கப் சூடாக டீயை வாங்கி, அதை கேஷுவலாக குடித்து விட்டு கிளம்பி சென்றார்கள். இதனை அந்த வழியாக சென்ற மக்கள் பூரிப்புடன் பார்த்து சென்றனர்