கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னையை திட்டி ஓட்டு கேட்கறாங்க.. அந்த போட்டோவை காட்டி கேட்க தைரியம் இருக்கா.. செந்தில்பாலாஜி கேள்வி

மோடி படத்தை காட்டி ஓட்டு கேட்க முடியுமா என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

அரவக்குறிச்சி: "என்னையே திட்டி திட்டி அதிமுக ஓட்டு கேட்டுட்டு வர்றாங்களே.. மோடி படத்தை வெச்சிட்டு ஓட்டு கேட்கிற தைரியம் இவங்களுக்கு இருக்கா?" என்று செந்தில் பாலாஜி காட்டமாக கேள்வி கேட்டுள்ளார்.

4 தொகுதி வேட்பாளர்களில் பலம் நிறைந்தவர் செந்தில்பாலாஜிதான். அதனால் இவரை வீழ்த்த அதிமுக தரப்பில் நிறைய வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

In Aravakurichi Campaign, Senthil Balaji slams AIADMK and BJP

இந்நிலையில், செந்தில்பாலாஜியோ தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அவருடன் கட்டாயம் தங்கை ஜோதிமணியும் சென்று வருகிறார்.

வேலாயுபாளையம் பகுதியில் செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்தபோது சொன்னதாவது: "அங்கங்கே சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பாங்க. ஆனா அப்படி சொல்றதுக்கு இவங்க எந்த திட்டங்களையும் செய்யல. அதனால என்னை திட்டி திட்டியே ஓட்டு கேட்டுட்டு இருக்காங்க.

அரவக்குறிச்சியில் பரபரப்பு.. இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திமுகவுக்கு அனுமதி மறுப்பா?அரவக்குறிச்சியில் பரபரப்பு.. இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திமுகவுக்கு அனுமதி மறுப்பா?

கரூர் எம்பி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எனக்காக ஓட்டுகேட்டு, என்னுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல, நாங்கள் ராகுல்காந்தியின் படத்துடன் மக்கள் கிட்ட பிரச்சாரம் செய்து வருகிறோம்.

ஆனால், அதிமுக எம்பி வேட்பாளர் சட்டசபை வேட்பாளருக்காக ஓட்டு கேட்க வரவில்லை, அவர் எங்கே போனார்? மோடி படம் என்னாச்சு? மோடி படத்தை காட்டி, மக்கள் கிட்ட ஓட்டு கேட்க அதிமுகவினர் தயாரா இருக்காங்களா?" என்று சவால் விடுத்தார்.

English summary
DMK Candidate Senthil Balaji campaigned with Jothimani in Velayudhapalayam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X