இது அக்னிப் பரிட்சை.. அமைதியாக இருங்கள்.. அரவக்குறிச்சி தாக்குதல் குறித்து கமல் டிவிட்!
நேற்று அரவக்குறிச்சியில் நடந்த முட்டை வீச்சு தாக்குதல் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
கரூர்: நேற்று அரவக்குறிச்சியில் நடந்த முட்டை வீச்சு தாக்குதல் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கற்கள் வீசப்பட்டது. ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் கமல்ஹாசன் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். பிரச்சார கூட்டத்தில் இருந்து திரும்பும் போது இந்த சம்பவம் நடைபெற்றது.
கடந்த திங்கள் கிழமை அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பேசினார். கமல்ஹாசன் தனது பேச்சில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று குறிப்பிட்டார். கமல்ஹாசனின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
கமலை குறிவைத்து எறியப்பட்ட முட்டை, கற்கள்.. கொதித்த மநீம.. அரவக்குறிச்சியில் நடந்தது என்ன?
இதற்கு எதிராகத்தான் தற்போது கமல்ஹாசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. நேற்று மீண்டும் மநீ ம சார்பாக அரவக்குறச்சி வேலாயுதம் பாளையத்தில் இந்த பிரச்சாரம் நடந்தது. அப்போது கமல்ஹாசன் பேச்சை முடித்துவிட்டு திரும்பும் போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் கீழே இறங்கி வந்த கமல்ஹாசனை நோக்கி முட்டை கற்கள் வீசப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்து கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.
கமல் தனது டிவிட்டில், ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே!, என்று குறிப்பிட்டுள்ளார்.
ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே!
— Kamal Haasan (@ikamalhaasan) May 16, 2019
கமல்ஹாசன் பேசியது வடஇந்தியாவில் வைரலானது. இதனால் இதே டிவிட்டை அவர் ஆங்கிலத்திலும் பகிர்ந்து இருக்கிறார். அவரது ஆங்கில டிவிட்டில் வடஇந்தியாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபா அமைப்பினர் கோபமாக பதில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Dear MNM family and fans, this is an acid test for our decorum and demeanour. Do not listen to their noises and be drawn into their violence. They are extremists who are slighted by the Truth. Naalai Namadhey!
— Kamal Haasan (@ikamalhaasan) May 16, 2019