கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல்ஹாசன் பிரச்சார கூட்டத்தில் இஸ்லாமியர்கள் குவிந்தனர்... கடும் கூட்ட நெரிசல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அவரக்குறிச்சி கமல்ஹாசன் பிரச்சாரத்தில் உண்மையில் நடந்தது இது தான்- வீடியோ

    அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசனை காண, ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்தனர். இதனால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில், தென்னிலை பகுதியில் அரவக்குறிச்சி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    கமலின் 'இந்து தீவிரவாதி' பேச்சை முன்வைத்து 'குளிர்காயும்' பாஜக? கமலின் 'இந்து தீவிரவாதி' பேச்சை முன்வைத்து 'குளிர்காயும்' பாஜக?

    மாற்றம் நிச்சயம்

    அப்போது, இதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்களின் கூட்டம் இருந்தது. கூட்ட நெரிசலால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள் திண்டாடிப் போயினர். கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், அரசியல் புரட்சியின் விளிம்பில் நிற்கிறோம், நேர்மையோடு வாக்களியுங்கள் மாற்றம் நிச்சயம் வரும் என்றார். இதனனைக் கேட்டு அக்கட்சியின் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

    சாதி, மதம், பேதமில்லை

    சாதி, மதம், பேதமில்லை

    நாடே திரண்டு சுதந்திரம் வாங்கியது, ஆனால் அந்த நாடு ஏன் இப்படி ஆனது? என அனைவரும் யோசிக்க வேண்டும் என்று கூறிய கமல்ஹாசன், அதை திருத்துவதற்கான கருவி நாம் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும், அப்படி செய்தால் நாளை நமதே என்றார். மேலும், மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மதம், பேதமில்லை; அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது என்றும் பேசினார்.

    ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டம்

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் பேசியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், கமல்ஹாசன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலாயுதம்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

    காலணி வீச்சு

    காலணி வீச்சு

    நேற்று, திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற கமல்ஹாசனை நோக்கி காலணி வீசிய பாஜகவினரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கருத்து தொடர்பான வழக்கில் கமல்ஹாசனின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    English summary
    Muslims converged at Kamal Haasan Campaign In Aravakurichi, Heavy crowd
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X