நீங்க ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க.. என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரே தம்பிதுரை
கரூர் தொகுதியில் தம்பிதுரை பிரச்சாரம் செய்தபோது சலசலப்பு ஏற்பட்டது.
கரூர்: அது என்ன பொசுக்குன்னு தம்பிதுரை இப்படி பேசிப்புட்டாரே என்று கரூர் தொகுதி மக்கள் ஷாக் ஆகி உள்ளார்களாம்!
பாஜகவை கடந்த காலங்களில் அதாவது போன மாசம் வரை தாறுமாறாக விமர்சித்தவர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைதான். மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது அந்த அவையில்கூட உட்காரவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன் அவருக்கு எவ்வளவு கோபம் என்று!
அதற்கு பிறகு எப்படியோ அந்த "திருப்பதி ஏழுமலை"யான் புண்ணியத்தால் அவருக்கு பழசெல்லாம் இப்போது மறந்து போயிடுச்சு.. அதிமுகவில் சீட்டும் கிடைத்தாயிற்று! தம்பிதுரைக்கு எப்படி சீட் தரலாம் என்று கோஷ்டிக்குள் தகராறு போய் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம், ஜெயிச்ச பிறகு தொகுதி பக்கம் வருவதே கிடையாது என்று மக்களுக்கு அதிருப்தியும் உள்ளது.
தோட்டத்திற்கு கூப்பிட்டார்.. போனேன்.. சாப்பாடு போட்டு இங்க வந்துடுன்னார்.. நான் போகலை.. திருமாவளவன்
வாக்குவாதம்
இந்த நிலையில் கரூரில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். ஏமூர் புதூர் காலனியில் நேற்று பிரச்சாரம் செய்ய தம்பிதுரை வந்தார். அப்போது அப்பகுதி மக்கள், "தண்ணி பிரச்சனை ரொம்ப இருக்கு.. எங்களால சமாளிக்க முடியல.. பஸ் வசதி சரி கிடையாது" என்று வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
கால்ல விழ முடியாது
ஓட்டு கேட்டு போன தம்பிதுரையோ இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், "நீங்க ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க. அதுக்காக உங்க கைல, கால்ல எல்லாம் நான் விழ முடியாது.
கண்டிப்பாக பஸ் வரும்
அதுக்குன்னு நான் வராமலும் போய்விடமாட்டேன். வருவேன்.. அடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு வருவேன். உங்க எம்பி உங்களுக்கு என்ன செய்தார்ன்னு எதிர்க்கட்சிகாரங்க உங்ககிட்ட கேட்பாங்க. பஸ் விடுமாறு அதிகாரிகள்கிட்ட சொல்லி இருக்கேன்.
அதிர்ச்சி
அது மட்டுமில்லை.. தொகுதியில் 8,000 கிராமங்களுக்கு இதுவரை போயிருக்கேன். இதுக்கு முன்னாடியும்தான் எத்தனையோ பேர் இங்க எம்பியா இருந்திருக்காங்க. அவங்க எல்லாம் என்ன செஞ்சாங்க?" என்று கேட்டார். தம்பிதுரை இப்படி பேசியதும் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து வாயடைத்து போய் நின்றார்கள்!