நீயே 16 கட்சிக்கு போய்ட்டு வந்துட்டே.. நான் பேச ஆரம்பிச்சேன்னு வச்சுக்கோ.. விஜயபாஸ்கர் விளாசல்
செந்தில் பாலாஜியை கடுமையாக அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்
Recommended Video
கரூர்: "நீயே 16 கட்சிகளுக்கு போய் வந்துட்டே.. நான் பேச ஆரம்பிச்சேன்னு வெச்சிக்கோ.. உன் பொழப்பு தண்டவாளத்தில் ஏறிடும்" என்று செந்தில்பாலாஜியை அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியான பெரியகுளத்துப்பாளையத்தில் கட்டப்பட்ட ரயில்வே குகைவழிப்பாதையை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அதில், "என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வந்து சேர்ப்பேன். ஆனா இவரு என்னை குறை சொல்லிட்டே இருக்காரு. நான் என்ன சொல்றேன்னா... நீயே 16 கட்சிகளுக்கு போயிட்டே..
இது ஒன்னுதான் பாக்கி.. வீதியில் இறங்கி விதிமீறல் பேனரைத்தான் நாங்கள் அகற்றவில்லை.. நீதிபதிகள் சரமாரி
இந்த திட்டங்களை எல்லாம் நான் செஞ்சேன்.. நான் செஞ்சேன்னு சொல்லக்கூடாது.. வெட்கம், ரோஷம் இருந்தா இனி நான் செஞ்சேன்னு எதையும் சொல்லக்கூடாது. இதே குளத்துபாளையத்தை சேர்ந்தவரோட நிலத்தை அடிச்சி புடுங்கினது யார்? அது சம்பந்தமா யார் மேல கேஸ் இருக்குங்றதை எண்ணி பார்க்க வேண்டும்.
24 ஆயிரம் லிட்டர் எரிசாராய கடத்தி, நீ யார் கால்ல போய் விழுந்து, கேஸ்-ல இருந்து தப்பிச்சேன்னு ஊருக்கே தெரியும்.. கள்ளச்சாராயத்தை பாட்டிலுக்குள்ள அடைச்சி வித்தது யாருன்னு ஊருக்கே தெரியும். வழக்கு பத்தி பேசலாமா? இதையெல்லாம் நான் பேச ஆரம்பிச்சால், உன் பொழப்பு தண்டவாளத்தில் ஏறிடும்" என்று பேசினார்.