40 வருச அரசியல்ல கேள்வி பட்டதே இல்ல.. செந்தில் பாலாஜியால் ஷாக்கான ஒபிஎஸ்
கரூர்: ஒரு கட்சி கூட்டத்துக்கு போக வேண்டாம் என பணம் கொடுத்ததாக 40 வருட அரசியலில் கேள்விபட்டதே இல்லையென என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் புகளூர் நான்கு ரோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண் பன்னீர்செல்வம், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், சிறுபான்மையினர் பாதுகாப்புடன் வாழும் ஒரே மாநிலம் தமிழகம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
அதிமுகவிற்கு துரோகம் செய்த செந்தில் பாலாஜிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில, "அதிமுகவின் கூட்டத்திற்கு போகாதே என்று சொல்லி திமுகவின் செந்தில் பாலாஜி பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள். நான் 40 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், கூட்டத்துக்கு போ என்று சொல்லி பணம் கொடுப்பாங்க என்று கேட்டு இருக்கிறேன்.
திமுகவுடன் தினகரன் ரகசிய உடன்படிக்கை.. வெற்றி பெற வைக்க துடிக்கிறார். முதல்வர் பழனிச்சாமி பகீர்
ஆனால் கூட்டத்திற்கு போக வேண்டாம் என பணம் கொடுக்கிறார் என்றால், நான் இப்போது தான் கேள்வி படுகிறேன். செந்தில் பாலாஜி அப்படி எவ்வளவு பணம் தான் வைத்திருக்கிறார். இந்த தேர்தலுடன் கட்சி தாவி தாவி செல்லும் செந்தில் பாலாஜிக்கு முடிவு கட்ட வேண்டும். அவருக்கு டெபாசிட் கிடைக்கக்கூடாது" இவ்வாறு கூறினார்.