நாஞ்சில் சம்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்.. கரூரில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த போது தாக்குதல்
கரூர்: கரூரில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத்தின் வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் தம்பித்துரை போட்டியிடுகிறார்.
கரூர் பேருந்து நிலையம் அருகே இறுதிகட்ட பிரச்சாரம் யார் செய்வது என்பது குறித்த விவகாரத்தில் திமுக அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மிரட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கள்ள காதலனுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்தாள் அர்ச்சனா.. அதான் கொன்னுட்டேன்!
இந்நிலையில் இன்று கரூர் வெங்கமேடு பகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஜோதிமணியை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் நாஞ்சில் சம்பத் வந்த கார் கண்ணாடியை கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது.
இதனால் கரூரில் திமுக அதிமுகவினரிடையே மோதல் ஏற்படும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து கரூர் வெங்கமேடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.