கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செந்தில் பாலாஜி எங்கே.. 3 சென்ட் நிலம் எங்கே.. திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்ட மக்கள்.. பரபரப்பு!

செந்தில் பாலாஜிக்கு எதிராக மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Nedungur People protest against DMK MLA Senthil Balaji

    கரூர்: "செந்தில் பாலாஜி எங்கே.. 3 சென்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி எங்கே" என்ற பதாகைகளை வைத்து தொகுதி மக்கள் திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு வந்து.. பிறகு திமுகவுக்கு தாவியவர் செந்தில் பாலாஜி. வந்த கொஞ்ச நாளிலேயே எல்லார் காதிலும் புகை வரும் அளவுக்கு மாவட்ட செயலாளர் பதவி தரப்பட்டது.

    இந்த புகைச்சல் அடங்குவதற்குள் அரவக்குறிச்சி இடைத்தேர்தலிலும் நிறுத்தப்பட்டு எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றார். இப்போது திமுகவின் மிக முக்கிய நிர்வாகியாக உள்ளார்.

    பரபரக்கும் தலைமை செயலகம்.. நுழைவாயிலில் படமெடுத்த நல்ல பாம்பு.. புதருக்குள் நுழைந்ததால் பீதி!பரபரக்கும் தலைமை செயலகம்.. நுழைவாயிலில் படமெடுத்த நல்ல பாம்பு.. புதருக்குள் நுழைந்ததால் பீதி!

    சலசலப்புகள்

    சலசலப்புகள்

    செந்தில் பாலாஜி, பிரச்சாரத்தின்போது, தான் வெற்றி பெற்றவுடன் 25 ஆயிரம் நபர்களுக்கு 3 சென்ட் இலவச நிலம், அதில் 10 ஆயிரம் பேருக்கு நிச்சயம் கொடுப்பதாக பொதுமக்களிடையே அறிவித்தார். இப்படி எல்லாருக்கும் 3 சென்ட் நிலங்கள் தருவது சாத்தியமா என்றும் அப்போது கேள்விகள், சலசலப்புகள் எழுந்தன.

    முணுமுணுப்புகள்

    முணுமுணுப்புகள்

    ஒருவேளை 22 தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும் என்ற நம்பிக்கையோடும் இந்த அறிவிப்பினை செய்துவிட்டாரோ என்றும்கூட அங்கலாய்ப்புகள் எழுந்தன.

    அதிருப்தி

    அதிருப்தி

    இப்போது, அந்த இலவச நிலம் பற்றி செந்தில்பாலாஜி எதுவுமே பேசாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கட்சிக்காரர்களின் வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் செல்கிறார், ஆனால் வெற்றி பெற்றதற்கு நன்றி சொல்ல கூட தொகுதி பக்கம் செந்தில் பாலாஜி வரவில்லை என்று வருத்தத்தில் உள்ளனராம்.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    இந்நிலையில், இன்று செந்தில்பாலாஜி, நெடுங்கூர் பகுதி ஏரியில் தூர்வாரும் பணிக்காக சென்றிருந்தார். அவருடன் கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளரும், திருவரம்பூர் சட்டமன்ற திமுக எம்எல்ஏவான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்றிருந்தார். அப்போது இந்த இரு எம்எல்ஏக்களுக்கு வழிநெடுகிலும் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    முற்றுகை

    முற்றுகை

    "3 சென்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி", "எங்கே 3 சென்ட் நிலம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் உதவியுடன் திமுக எம்எல்ஏக்கள் பாதுகாப்புடன் வெளியேறினர்.

    English summary
    Nedungur People protest against Aravakurichi DMK MLA Senthil Balaji and MLA Anbil Mahesh Poiyaamozhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X