MK Stalin: பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைக்கு தங்கையின் பெயரை சூட்டி அழகுபார்த்த ஸ்டாலின்!
Recommended Video
கரூர்: அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திள்ளன.
சட்டசபை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தீயாய் வேலை செய்து வருகின்றன.
சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டும்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி
ஸ்டாலின் பிரச்சாரம்
இந்நிலையில் நேற்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பு
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தவிட்டுப்பாளையம் பகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு திரண்ட மக்களிடம் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தங்கையின் பெயர்
இதைத்தொடர்ந்து பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டினார் ஸ்டாலின். தனது தங்கையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பெயரை சூட்டியுள்ளார் ஸ்டாலின்.
பெயர் சூட்டும் ஸ்டாலின்
நேற்று முன்தினம் சூலூர் தொகுதிக்குட்பட்ட பட்டணம் பகுதியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். பெண் குழந்தை ஒன்றிற்கு கண்மணி என்றும் ஆண்குழந்தைக்கு அன்பழகன் என்றும் பெயர் சூட்டினார் என்பது நினைவுகூறத்தக்கது.