பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் செந்தில் பாலாஜி... அன்புமணி விமர்சனம்
அரவக்குறிச்சி: ராகுல் காந்தி பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து கந்தம்பாளையம் பகுதியில், அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை என்றார்.
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்... கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது
நிறைவேறாது
ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதலமைச்சர் ஒரு முறை சொன்னாலே அது நடக்கும்.
அ.தி.மு.க. தோற்க வேண்டும் என்பது தான் டி.டி.வி. தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை.
ஆனால், எங்களது ஆசை என்னவென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது.
ஒரு போதும் நடக்காது
தேர்தல் பிரச்சாரங்களில், மு.க.ஸ்டாலின் எந்த வளர்ச்சியை பற்றியும் பேசவில்லை மாறாக என்னை, முதலமைச்சர், துணை முதலமைச்சர், மோடி ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரீக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம்.
ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது.
மிகுந்த குழப்பம்
இதனை தெரிந்து கொண்டு 3-வது அணிக்கு போகும் நோக்கில், சந்திரசேகரராவிடம் ஒரு மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இருந்து மிகுந்த குழப்பத்தில் எதிரணி இருப்பது தெரிகிறது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார். அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறார்.
பதில் சொல்ல வேண்டும்
ஏன் தமிழ்நாட்டில் அவர் முதலீடு செய்யவில்லை? இதற்கு என்ன ஸ்டாலின் பதில் சொல்ல போகிறார் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.