முரசொலியிலேயே வந்துருக்கு.. ஸ்டாலின் இல்லைன்ணு சொல்ல முடியாது.. பேப்பருடன் பழனிச்சாமி
கரூர்: செந்தில் பாலாஜியை முன்பு இகழ்ந்து பேசிய ஸ்டாலின், இப்போது புகழ்ந்து பேசி நாடகமாடுகிறார, இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெஞ்சமாங்கூடலூரில் திங்கள்கிழமை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி எனது தகுதியை பற்றி பேச தகுதி இல்லை என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது முரசொலி பத்திரிக்கையில் வந்திருக்கு.அவரது கட்சி பத்திரிக்கையில் வந்திருக்கு. இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.
ஆனால் அதே ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி நல்லவர், வல்லவர் என்று கூறி ஓட்டுப்போடுமாறு கேட்கிறார் ஸ்டாலின்" இவ்வாறு கூறினார்.
பெண்களுடன் அன்னையர் தினம், பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
குரும்பப்பட்டியில் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "துரோகியால் இப்போது இங்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்த தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை முன்பு இகழ்ந்து பேசியவர். இப்போது புகழ்ந்து பேசி நாடகமாடுகிறார். மக்கள் ஸ்டாலினின் நாடகத்தை நம்ப மாட்டார்கள்" என்றார்
கரூரில் புதியதாக கட்டப்படும் மருத்துவ கல்லூரி விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் விவசாயிகள் பயன்படும் வகையில் முருங்கைக்காய்க்கு குளிர்ப்பதன கிடங்கு அமைக்கப்படும் என்றும் பிரச்சாரங்களின் போது முதல்வர் பழனிச்சாமி உறுதி அளித்தார்.