அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும்.. அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை
கரூர்: அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் என்று போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் அமராவதி ஆற்றுப் பாலத்தில் சீமை கருவேலம் மரங்கள் அழிக்கும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அந்த பணிகளை போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் மிக விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயக்கப்படும்.
மிக விரைவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மின்சார பேருந்தும் இயங்கும். அதற்கான முயற்சிகள் தொடங்கப் பட்டுள்ளன. லோக்சபா தேர்தலை பொறுத்தவரை.. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக நிச்சயம் இணையும் என்று அவர் கூறினார்.