கல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்!
15 வயது சிறுமியை சீரழித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
கரூர்: "உன்னைதான் கல்யாணம் செய்வேன்" என்ற ஆசை வார்த்தையை சொல்லி சொல்லியே பலமுறை பள்ளி மாணவியுடன் உறவு கொண்டு, கர்ப்பமாக்கிய இளைஞனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட கீழத்தலையூர் மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
இவரது மனைவி விஜயா வயது 45. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகளுக்கு வயது 15. பக்கத்தில் உள்ள எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விஜயாவுக்கு சொந்தக்காரர் என்று சொல்லப்படுகிறது. வயசு 25 ஆகிறது.
சொந்தக்காரர் என்பதால் லோகநாதன் பள்ளி மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். விஷயம் தெரிந்து விஜயா உள்ளிட்ட உறவினர்கள் கொதித்து போனார்கள்.
இது சம்பந்தமாக அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் லோகநாதனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.